![]() |
தரம் 6 -2023 அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பம் |
நோக்கக் கூற்று
நவீன உலகிற்குத் தேவையான ஆற்றல்களையும் திறன்களையும் மாணவர்க்கு அளித்துக் கல்வி, ஒழுக்க, சமய, இனப் பண்பாட்டு மரபுகளைப் பேணுகின்ற இலட்சிய சீலர்களை வளர்த்துத் தனக்கும் சமூகத்திற்கும் ஆளுமை பொருந்திய நற்பிரசைகளாக உருவாக்குவோம்.
மாணவர்களுக்கான பணிக்கூற்று
எமது தோழமையான திறன்மிகு ஊக்கங்கொண்ட ஆசிரிய குழுமத்தினர் ஊடாகப் புரிதலும் சவாலும் நிறைந்த கல்வியை வழங்கி மாணவர்களின் தேவையை நிவர்த்தி செய்தல்.
ஆசிரியர்களுக்கான பணிக்கூற்று
மீயுயர் பெறுமானமுள்ள கற்பித்தற் பணியினை முன்னெடுக்கும் ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களுக்கான வெகுமதிகளை வழங்கும் சமதருணத்தில் அவர்களின் தனிநபர் மேம்பாட்டுக்கான சந்தர்ப்பங்களையும் நல்கி, கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் இலட்சியத்தோடு இணங்குநராக்கி, கல்லூரியின் விருத்திக்கு உழைக்கும் ஆசிரியர்களோடு நட்போடு இருத்தல்.
சமூகத்திற்கான பணிக்கூற்று
இந்தப் பிரதேசத்தின் சமூக பொருளாதார,சூழல், கல்வி, கலாசார மேம்பாட்டுக்கான பங்குதாரர்களாக இருத்தல்
மகுடவாசகம்
"ஒளிபரவட்டும்"